/* */

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

மோடி அரசு உள்ளாட்சிகளுக்கு அதிக திட்டங்களை அளித்து வருகிறது என்றார் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்ஆனந்த்

HIGHLIGHTS

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் மல்லிகா கணேசனுக்கு ஆதரவாக சிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

கடந்த ஆறு மாதத்தில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக் குறியாகி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் போட்டியிடும் மல்லிகா கணேசனை ஆதரித்து அவருடைய மகனும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணைய உறுப்பினருமான டாக்டர் ஜி ஆனந்த் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மோடியின் அரசு சாதனைகளை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.ஜி. ஆனந்த் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் தினசரி 150 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் குறிப்பாக ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு வருகிறது .

தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் உள்ளாட்சியில் இருந்து தொடங்க வேண்டும் மோடி அரசு உள்ளாட்சிகளுக்கு அதிக அளவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது . அதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை உறுதி செய்து உத்தரவிட்டு உள்ளது. எனவே மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை பாகுபாடு இன்றி நடந்து உரியவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரும் நானும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டோம் அதன் அறிக்கையை 50 தினங்களுக்குள் ஆணையத்தின் தலைவர் அரசிடம் சமர்ப்பிப்பார். அறிக்கை பாகுபாடின்றி வழங்கப்படும். தமிழகத்தில் சிஸ்டம் சீர்குலைந்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றார் ஆர்.ஜி. ஆனந்த்..

Updated On: 16 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....