/* */

உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு

Uthamar Gandhi Award-புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு
X

பைல் படம்

Uthamar Gandhi Award-உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறி முறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார்.

கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும் புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அரசாணை (நிலை) எண்.111, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி2) துறை, நாள்:05.09.2006-இன்படி உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டு 2006-07 முதல் 2009-10-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் வருடத்திற்கு 15 விருதுகள் வீதம் 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது

இந்த விருது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3.80 கோடி ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப் படுத்தும் வகையில் http:/tnrd.tn.gov.in/ என்கிற அரசின் இணையளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையில் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10.11.2022 அன்று பத்திரிக்கை செய்தி வெளியிடப் பட்டுள்ளது. மேலும், தற்போது பின்வருமாறு புதிய வழிகாட்டு நெறி முறைகள் பெறப்பட்டதை பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அறியும் வகையில் வெளியிடப்படுகிறது.

இணையதளத்தின் சுட்டி மூலம் http:/tnrd.tn.gov.in/ என்கிற முகவரியை தேர்வு செய்யவும். மேற்படி இணையதளத்தினுள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும். மேற்படி பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ சுட்டவும். அதன் அடிப்படையில், அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் இருக்கும். அப்படிவத்தினை முறையே பதிவு செய்து "Save" பொத்தானை அழுத்தி சேமிக்க வேண்டும் எனவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 April 2024 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்