Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை: நகைக்காக தங்கை கொலை; இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது
புதுக்கோட்டையில் நகைக்காக தங்கையை கொலை செய்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சி பொன்னகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் உறவான லெட்சுமணன் (எ) சுரேஸ் கைது செய்யப்பட்டார்.
இவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதுக்கோட்டை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.