/* */

புதுக்கோட்டை நகரில் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை நகரில் பல பகுதிகளில்நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில்  நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் திடீர் ஆய்வு
X

புதுக்கோட்டை நகர பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில்.

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் தினம் தோறும் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

அதன்படி இன்று போஸ் நகர் 5ம் வீதியில் ஒரு வீட்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு சிறுவன் சிகிச்சை பெற்று வருகின்றான் என்ற தகவல் அறிந்த புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் போஸ் நகர் பகுதியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதியில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கொசு மருந்து அடிக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல் புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் நேரடியாகச் சென்று நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆய்வை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 April 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்