தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் புதுக்கோட்டை வீராங்கனை
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் தேசிய பளு தூக்குதல் போட்டிகளில் புதுக்கோட்டை மாணவி பிரியா வெண்கலம் வென்றார்
HIGHLIGHTS
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் புதுக்கோட்டை வீராங்கனை
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 19.6.2022. ஆம் தேதி நடைபெற்ற கேலோ இந்தியா திட்டம் சார்பில் மகளிர் தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் பளு தூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் 76 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவி பிரியா வெண்கல பதக்கம் பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார், இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த மாணவி தொடர்ந்து இரண்டாவது முறையாத தேசிய பதக்கங்களை பெற்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர். வெற்றி பெற்ற மாணவியை நேரில் வரவழைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வாழ்த்தினார், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், புதுக்கோட்டை மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளர் முத்துராமன் சமூக ஆர்வலர் புதுகை செல்வா, புதுக்கோட்டை மாவட்ட பளுதூக்கும் பயிற்சியாளர் , மற்றும் சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.