/* */

பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்

ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது மாணவ மாணவிகள் இடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்
X

புதுக்கோட்டை, காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ,மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளியில் இன்று வருகை தந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜு மற்றும் ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவ, மாணவிகளை மலர் தூவி வரவேற்பளித்து மகிழ்ச்சி அடையச் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்ததால், மாணவர்கள் மிகுந்த சோர்வடைந்து வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்தனர். இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். 5 மாதங்களுக்குப் பிறகு வருகை தந்த மாணவ மாணவிகளை, ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிதைப்பித்தன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராசு, சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 1 Sep 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!