/* */

காந்தி ஜயந்தி: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை பேட்டிகள்

காந்தி ஜயந்தியை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை ஆண்டு தோறும் காந்தியத் திருவிழா வாக கொண்டாடி வருகிறது

HIGHLIGHTS

காந்தி ஜயந்தி: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை பேட்டிகள்
X

பைல் படம்

அக்.2 காந்தி ஜயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில் செப்டம்பர்-2 ஆம் தேதி நடைபெறும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை அறிவித்துள்ளது.

அக.2.காந்தி ஜயந்தியை முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பில் நடக்கும் “காந்தியத் திருவிழா 2023” வையொட்டி, பள்ளி,கல்லூரி மாணவர் களுக்கான பேச்சு, ஓவியம், பாட்டு, கவிதை,கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் உள்ளிட்ட போட்டிகள் செப்டம்பர், 2 -ஆம் தேதி புதுக்கோட்டையில்; நடைபெறுவதாக பேரவையின் நிறுவனர் முனைவர் வைர.ந. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்:

காந்தி ஜயந்தியை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை ஆண்டு தோறும் “காந்தியத் திருவிழா” வாக கொண்டாடி வருகிறது. அதற்கென ஆண்டுதோறும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டியும், மாவட்டங்கள் அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கானபோட்டிகளில் முதற்கட்டமாக மாநில அளவிலான கட்டுரைப் போட்டி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக மாவட்டங்கள் அளவிலானபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, ஓவியம், பாட்டு, கவிதை, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போன்றபோட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் தேதி சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டிகளின் விவரங்கள்:

பேச்சுப்போட்டி 6,7,8 வகுப்புகளுக்கு :காந்திய வழியில் நாமும் செல்வோம்

9,10,11,12;வகுப்புகளுக்கு: பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்

கல்லூரிகளுக்கு :“எங்கே செல்லும் இந்த போதை .

கட்டுரைப் போட்டி:

6,7,8 வகுப்புகளுக்கு :சுதந்திரபோராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு.

9,10,11,12;வகுப்புகளுக்கு:மது,போதைப் பொருட்களற்ற தமிழகம் உருவாக மக்களும், மாணவர் களும் ஆற்ற வேண்டிய பங்கு.

கல்லூரிகளுக்கு :இன்றைய சமூக பிரச்னைகளும் பிரச்னைகளை தீர்க்க காந்திய வழி தீர்வுகளும்

கவிதைப்போட்டி: அனைவருக்கும் பொதுவானது. போட்டிக்கு10 நிமிடம் முன்னதாக தலைப்பு தரப்படும்.

பாட்டுப்போட்டி: அனைவருக்கும் பொதுவானது.காந்திய பாடல்கள், தேசியபாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள் மட்டும் (சுயமாக எழுதியதாகவும் இருக்கலாம்)

ஓவியப் போட்டி:அனைவருக்கும் பொதுவானது :காந்தி மற்றும்; சமூக விழிப்புணர்வு குறித்த காட்சிகள்

குழு நடனப் போட்டி : 5 முதல் 10 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். காந்திய,தேசிய, சமூகவிழிப்புணர்வு பாடல்கள். நேரம்: 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குழு நாடகம் : 5 முதல் 10 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். காந்திய, தேசிய, சமூக விழிப்புணர்வு கருத்துகள் மட்டும். நேரம் : 15 நிமிடங்கள்

குறிப்பு:ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பள்ளி மற்றும்; கல்லூரியின் சார்பில் மேற்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியரில் ஒவ்வொரு போட்டிக்கும் இருவரை மட்டும் (குழு நடனம் மற்றும் குழு நாடகத்திற்கு ஒரு குழு மட்டும்) தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விதிமுறை:போட்டிகளில் பங்கேற்போர் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதம் பெற்று வரவேண்டும்..போட்டி முடிவுகள் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

மாறுவேடப்போட்டி : காந்தி வேடம் மட்டும் 02-10-2023 அன்று காலை 9 மணியளவில் புதுக்கோட்டை காந்தி பூங்காவில் நடைபெறும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் 02-10-2023 அன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரிகள், பள்ளிகள் தங்களின் பங்கேற்பை முன்னதாக 94434-88752,04322-222337 ஆகிய எண்களிலோ அல்லது அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை, 3473 – 1 தெற்கு 2ஆம் வீதி, புதுக்கோட்டை– 622001என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது gandhiperavai@ gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94434 88752 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ தெரிவிக்கலாம் என்றும் வைர.ந.தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!