புதுக்கோட்டையில் நன்றி தெரிவித்த தி.மு.க. நகர் மன்ற உறுப்பினருக்கு வரவேற்பு
புதுக்கோட்டையில் நன்றி தெரிவித்த தி.மு.க. நகர் மன்ற உறுப்பினருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
HIGHLIGHTS
நடந்து முடிந்த நகராட்சி மாநகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. ,அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டு தற்பொழுது தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை தேடிச்சென்று நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் 38வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காதர்கனி இன்று தனது வார்டுக்கு உட்பட்ட மாலையீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனக்கு வாக்களித்த பொது பொதுமக்களை வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.
நன்றி தெரிவிக்க சென்ற நகர்மன்ற உறுப்பினர் காதர் கனிக்கு மாலையீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்து நகர மன்ற உறுப்பினரை வரவேற்றனர்.
மேலும் தங்கள் பகுதிகளில் அடிப்படை பிரச்சினைகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் நகர்மன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.