கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆர்வமுடம் பங்கேற்ற மாணவர்கள்
அரசு மகளிர் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் செப். 1 -ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் மட்டும் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் நகர மன்ற வளாகத்தில் அதிகளவில் திரண்டனர்.
கல்லூரி திறக்கும் தேதிக்குள் மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்போது, புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரி என இரண்டு கல்லூரிகளில், மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய இந்த தடுப்பூசி முகாமில் அதிக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்பொழுது ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.