/* */

மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

புதுக்கோட்டை போஸ் நகர் பொதுமக்கள் சார்பில் மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்
X

புதுக்கோட்டை போஸ் நகர் பொதுமக்கள் சார்பில் மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்கள் கடந்த எட்டாம் தேதி குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியதில் இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் உடல் கருகி இறந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் போஸ் நகர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அலங்கரிக்கப்பட்ட இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் புகைப்படத்திற்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் போஸ் நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...