புதுக்கோட்டையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
உலக கொடையாளர் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில், ரத்ததான முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில், தேசிய கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பல்வேறு நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், சிவகாமி அம்மாள் ரத்ததான கழகத்தின் தலைவர் கார்த்திக், மெஸ் மூர்த்தி மற்றும் ரத்ததான கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரத்தானம் செய்த இளைஞர்களுக்கு, அதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கி, இளைஞர்களை பாராட்டினார்.