/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒப்பாரி போராட்டம்

புதுக்கோட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொது மக்களை பழங்கால முறைக்கு திருப்பி விட்டது என்று கூறி சைக்கிளில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதியபேருந்து நிலையத்தை வந்தடைந்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் நகர தலைவர் இப்ராகிம் பாபுமுன்னிலை வகித்தனர்.

Updated On: 13 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது