/* */

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு  கோரிக்கை
X

தமிழக முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் வடக்குமாதவி சாலையில் உள்ள தனியார் வணிக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முடிதிருத்தும் தொழிலாளிகள் இந்த கொரோனா ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளதாகவும் அரசு அவ்வபோது அறிவிக்கும் தளர்வுகளால் தங்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு எந்தவித தளர்வுகள் வழங்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

இதுவரை பெரம்பலூரில் கொரோனா தொற்றால் 5 கும் அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது குடும்பத்தினர் தற்போது வருமானம் இன்றி உணவிற்கே அல்லல்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

இது போன்று பல்வேறு பிரச்சனைகளை கொரோனா ஊரடங்கில் சந்தித்து வரும் எங்களுக்கு தமிழக அரசு பத்தாயிரம் நிவாரணமும், மருத்துவ காப்பீடு வழங்கிட வழிவகுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கையை ஏற்று நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்திட வேண்டுமென வலியுறுத்தினர்.

Updated On: 30 May 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...