/* */

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருநங்கைகள் தங்களது மனவலிமையினை வளர்க்கும் சிந்தனையோடு கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி லதா தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைளுக்கான நிவாரண மற்றும் அடையாள அட்டைகளை நீதிபதி லதா திருநங்கைகளுக்கு வழங்கினார்.

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லதா தலைமை வகித்தார் . மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைளுக்கான நிவாரணம் மற்றும் அடையாள அட்டைகளை நீதிபதி லதா வழங்கி, திருநங்கைகளுக்கான உரிமைகள் மற்றும் அவசியத்தினை எடுத்துரைத்தார் .

மேலும் திருநங்கைகள் தங்களது மனவலிமையினை வளர்க்கும் தன்னம்பிக்கை சிந்தனையோடு கல்வியினை திறம்பட கற்றுக் கொள்ள வேண்டும். திருநங்கைகள் வேலைவாய்ப்பினை தேடும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று தொழில் முனைவோராக தங்களை உருமாற்றி வேலையை வழங்கும் நிலையை அடைய வேண்டும். இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தொழிநுட்பங்களை கற்று சமூக ஊடகங்கள் போன்ற இணைய வழியின் மூலமாக தங்களின் திறமைகள் அனைவரும் அறியும் வண்ணம் இணைத்து செயல்பட வேண்டும் .

மேலும் திருநங்கைகளிடம் கலந்துரையாடல் மூலம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளீஸ்வரன், சிவம் அறக்கட்டளையின் இயக்குநர் சிற்றம்பலம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Updated On: 29 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!