Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் கொரோனா நிதி ரூ.2000 வழங்கப்பட்டது
பெரம்பலூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முதல் தவணையாக ரூ.2000 தொகையை பொதுமக்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது.
முதல்கட்டமாக வழங்கப்பட்ட இந்த நிவாரண தொகை இன்று 200 பேருக்கு வழங்கப்பட்டது.மேலும் ரேசன் கடைகளுக்கு வருகை தந்த மக்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் நிவாரணத் தொகை பெறும் டோக்கன் மற்றும் ரேசன் கார்டுகள் ஆகியவைகளை கொண்டு வந்து பெற்று சென்றனர்.