Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்
பெரம்பலூரில் கடைகள் மற்றும் மக்களிடம் ஆவின் பால் மற்றும் உற்பத்தி பொருள்களின் தரத்தை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கினர்
HIGHLIGHTS
பெரம்பலூரில் ஆவின் பால் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களை விற்பனையை மேம்படுத்தும் வகையில் மக்களிடம் அதன் தரத்தை எடுத்துக்கூற குழு அமைக்கப்பட்டது. திருச்சி மண்டல ஆவின் பொது மேலாளர் ரசிகலா தலைமையிலான ஆவின் நிர்வாகிகள் ஊழியர்கள் குழு, பெரம்பலூர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை கடை உள்ளிட்ட இடங்களில், ஆவின் பால் மற்றும் நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற ஆவின் பொருட்களையும் அதன் தரத்தையும் விளக்கினர்,
விரைவில் ஆவின் பால் வீடுகளுக்கு நேரில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையும் வலியுறுத்தி, ஆவின் பொருட்களை கடைகளில் விற்பனை செய்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது உதவி பொது மேலாளர் முனுசாமி, துணைப்பதிவாளர் சந்திரசேகர் துணைப் பொது மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.