/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில்   ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர், சி.கமலநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை அளித்தனர். அதில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் 13 மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி 15 தினங்களுக்குள் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், ஓய்வூதியதாரர்களின்; கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவுடன் பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஓய்வூதிய இயக்கக முதுநிலை கணகாணிப்பாளர் ரிச்சர்ட் பாட்ரிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) பி.எஸ்.ஸ்ரீதர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மு.பாரதிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) நாராயணன், மாவட்ட கருவூல அலுவலர் நா.பார்வதி, மற்றும் பல்வேலு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Nov 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!