Begin typing your search above and press return to search.
நில பிரச்சினை தீர்க்க சிறப்பு முகாம்: 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில், நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க, சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
முகாமில், பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஞ்சனா, காவல் உதவி ஆய்வாளர் முகமது அபுபக்கர் மற்றும் தலைமைக் காவலர்களும், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த மனு விசாரணை முகாமில், மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.