/* */

உதகையில் காட்டெருமையை தாக்கிய நபர் கைது

காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

உதகையில் காட்டெருமையை தாக்கிய நபர் கைது
X
காட்டெருமையை தாக்கும் நபர்.

ஊட்டி அருகே கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று நடமாடி வருகிறது. இந்த காட்டெருமை குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கேத்தியில் சேலாஸ் செல்லும் சாலையில் ஒற்றை காட்டெருமை காயத்துடன் நடமாடியது.

இதை பார்த்த ஒரு நபர் ஆத்திரமடைந்து கம்பால் காட்டெருமையை தாக்கி உள்ளார். இதனால் காட்டெருமை திரும்பி சாலை வழியாக ஓடி வனப்பகுதிக்குள் சென்றது. அங்கிருந்த மக்கள் அந்த நபரிடம் காட்டெருமையை தாக்கக் கூடாது, ஏற்கனவே காயத்துடன் சுற்றுத்திரிகிறது என்று தெரிவித்தும் அந்த நபர் காட்டெருமையை தாக்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் காட்டெருமையை தாக்கிய நவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு