/* */

கோடநாடு வழக்கு: உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

கோடநாடு வழக்கில் விசாரணை செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் 34 நாட்களுக்கு பிறகு நாளை விசாரணை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை
X

பைல் படம்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது காவல் துறை சார்பில் கூடுதல் விசாரணை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற இந்த உத்தரவுக்கு பின் இந்த காவல் துறையின் மறு விசாரணையானது மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

34 நாட்கள் நடைபெற்ற இந்த புலன் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரும் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 40 க்கும் மேற்பட்டவர்களிடமும், 10-க்கும் மேற்பட்ட காவலர்களிடமும் தனிபடையானது விசாரணையை மேற்கொண்டது.

மேலும் வழக்கில் காவல்துறை சார்பில் சந்தோகிக்கப்பட்ட 9-க்கும் மேற்ப்பட்டவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 34 நாட்களுக்கு பின் இந்த வழக்கு விசாரணையானது நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வர உள்ளது. தனிப்படை மூலம் நடந்த இந்த விசாரணையின் அனைத்து வாக்குமூலங்களும் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள நான்கு பேரிடம் இதுவரை விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து விசாரணையில் பரபர திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வரவுள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.

Updated On: 30 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  2. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  3. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  4. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  5. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  6. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  7. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  8. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  10. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!