/* */

உதகையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

உதகையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80,000 சிக்கியது.

HIGHLIGHTS

உதகையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
X

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய அலுவலகம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கான கூட்டம் உதகை பிங்கர்போஸ்ட்டில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி இயக்குனருக்கு பணம் கொடுக்க உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி இயக்குனர், செயல் அலுவலர்களிடம் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 7 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், 5 பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஒரு இளநிலைப் பொறியாளர் ஆகிய 7 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சோதனை 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.

Updated On: 14 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!