/* */

கோத்தகிரியில் கயிறு இறுக்கி காயமடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை

கோத்தகிரியில் கழுத்தில் காயமடைந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்த வனத்துறையினர்.

HIGHLIGHTS

கோத்தகிரியில் கயிறு இறுக்கி  காயமடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை
X

காயமடைந்த காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்திய காட்சி.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று கழுத்தில் கயிறு மாட்டி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அணையட்டி பகுதியில் காட்டெருமை இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட வனக் காப்பாளர் குருசாமி தபேலா , வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் காட்டெருமை கழுத்தில் சுற்றி இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, காட்டெருமை மூன்று மணி நேரம் தேயிலை தோட்டத்தில் உலா வந்தது. வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை கண்காணித்து வருகின்றனர் .

Updated On: 9 Aug 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்