/* */

நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்

இது குறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்
X

கெத்தை ஆற்று பகுதியில் புலி தாக்கியதில் இறந்த பசுமாடு.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை அணை பகுதியில் மின் நிலையம் உள்ளது. அங்கு வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

மாரிச்சாமி என்பவரின் பசுமாடு கெத்தை ஆற்று பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது பாறை இடையே மறைந்திருந்த புலி பசு மாட்டின் கழுத்தை கடித்து குதறியது. இதில் பசு மாடு பரிதாபமாக இறந்தது.

இது குறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு இறந்த பசு மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது புலி அடித்து கொன்ற பசுமாடு சினையாக இருந்தது தெரியவந்தது. பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Updated On: 17 March 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!