/* */

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து

அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து
X

மருத்துவமனை மீது விழுந்த மரக்கிளையை அகற்றும் ஊழியர்கள்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் குன்னூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை குன்னூர் அரசு லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்தது.

இதனை அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவமனையின் மேற்கூரை மற்றும் கட்டிடம் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

மேலும் மருவத்துமனை வளாகத்தில் காலை வெளிநோயாளிகள் யாரும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Nov 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்