/* */

அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுரை

கூடலூர் ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்களுக்கு  வனத்துறை அறிவுரை
X

கூடலூர் அருகே, புலி நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை வேளையில் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கியில் அறிவுறுத்திய வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, ஸ்ரீ மதுரை அம்பலமூலா கிராமத்தில் கடந்த இரு மாதங்களில் சுமார் 6 பசுமாடுகள் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. நேற்றைய தினம், கொட்டகையில் இருந்த பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து உடனடியாக புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து, அறிவுரைகளை வழங்கினர்.

பொதுமக்கள் இரவு நேரங்களில் மற்றும் அதிகாலை வேளையில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் புலி நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Updated On: 19 Sep 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?