/* */

நீலகிரியில் கனமழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் கனமழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர்,தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஆங்காங்கே, சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கூடலூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடலூரில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்து அதை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பந்தலூர் தேவாலா கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மிக கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 July 2021 2:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்