/* */

கூடலூரில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை தீவிர விசாரணை

உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பிறகே சிறுத்தை உயிர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கூடலூரில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை தீவிர விசாரணை
X

அம்பலமூலா கிராமத்தில் இறந்து கிடந்த சிறுத்தை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்பலமூலா கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு துவக்கப்பள்ளியை ஒட்டி தனியார் தேயிலை தோட்டத்தில், சிறுத்தை ஒன்று விழுந்து கிடந்ததை பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஊர் மக்களுக்கும், பின்னர் வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கூடலூர் வனத்துறையினர், இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தது, சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையை ஒட்டிய பகுதியில், சிறுத்தை இறந்து கிடந்தது, வனத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, வனத்துறை தெரிவித்திருக்கிறது.

Updated On: 2 Nov 2021 12:54 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...