/* */

கொல்லிமலையில் தொடர் கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொல்லிமலையில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் தொடர் கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
X

கொல்லிமலையில் உள்ள சிற்றருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொல்லிமலை பகுதியில் சுமார் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பசுமையாக, கண்களுக்கு ரம்மிகயமாக காட்சியளிக்கிறது.

தொடர் மழையால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கொல்லிமலையில் ஆகாயகங்கை, நம்ம அருவி, மாசிலா அருவி மற்றும் சிற்றருவி உள்ள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் அரப்பளீஸ்வரர் கோயில், தோட்டக்கலை பூங்கா, வியூ பாயின்ட், படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். அருவி பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 7 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?