/* */

கொல்லிமலையில் இறந்துகிடந்த காவலர்: உடலை மீட்டு போலீசார் விசாரணை

கொல்லிமலையில் நாமக்கல்லைச் சேர்ந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் இறந்துகிடந்த காவலர்: உடலை மீட்டு போலீசார் விசாரணை
X

பைல் படம்.

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (33). இவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், அவர் கொல்லிமலைக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கொல்லிமலை தின்னனூர்நாடு சோளப்பள்ளம் என்ற இடத்தில் காவலர் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.

காவலர் ஆனந்தன் இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதணை முடிவில் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இது தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  2. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  3. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  5. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  6. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  7. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  8. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  9. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  10. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!