Begin typing your search above and press return to search.
வெண்ணந்தூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வெண்ணந்தூர் அருகே ஜவ்வரிசி ஆலையில் டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாம
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (65). இவர் வெண்ணந்தூர் அருகே அனந்தகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, சின்னசாமி ஜவ்வரிசி கலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னசாமியை தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.