/* */

வெண்ணந்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெண்ணந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் அருகே வாகனம்  மோதி தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அடுத்துள்ள, மேற்கு வலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (32). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரோட்டைக் கடந்து செல்ல முயன்றார்; அந்த நேரத்தில், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மோட்டார் வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்த வந்த வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார், பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 16 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?