/* */

இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தை ராசிபுரம் பகுதியில் துவக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு பட்டுக்கூடு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்:  தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுப்பட்டி பட்டணம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2,400 ஏக்கர் பரப்பில் மல்பெரி பயிரிடப்பட்டு, பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டுக்கூடு உற்பத்தியில் 1,600 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுப்புழு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தேவைப்படும் மாவட்டங்களில் பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் பட்டுக் கூடுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என திமுக சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், முத்துகாளிப்பட்டியில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பட்டு விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட பட்டு உற்பத்தி விவசாயிகள், கைத்தறி நெசவுத் துறை அமைச்சர் காந்தி, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பட்டுப்புழு விவசாயிகள் சேலம், தருமபுரி போன்ற இடங்களுக்குச் சென்று பட்டுக்கூடு ஏல விற்பனையில் பங்கேற்று வரும் நிலையில், ராசிபுரம் பகுதியில் பட்டுக்கூடு ஏலமையம் தொடங்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக பட்டு உற்பத்தி விவசாயிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முத்துகாளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் மற்றும் பட்டுவளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’