/* */

ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்

ராசிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட  ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்
X

பைல் படம்

தமிழகம் முழுவதும் 28ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, இறைச்சி, பாத்திரம், ஸ்டேசனரி, ஹோட்டல், பேக்கரி, டீக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக நாமக்கல் சப் கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையொட்டி,சப் கலெக்டர் கோட்டைக்குமார் தலைமையில் அலுவலர்கள் ராசிபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூக்கடை வீதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கு கடைக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு, வியாபாரம் நடந்து வந்தது.

இதனையடுத்து அந்தக் கடையை பூட்டி சீல் வைக்க சப் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடை உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 29 Jun 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...