/* */

வெண்ணந்தூர் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன்

இராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், அமைச்சர் மதிவேந்தன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன்
X

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில், கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

தமிழக அரசின் சார்பில், இன்று மாநிலம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 700 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல், இரவு 7 மணிவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் ஒன்றியம், மசக்காளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாம் துவக்க விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், முகாமை துவக்கி வைத்து தனக்கு இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்