/* */

ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு

பரமத்திவேலூரில் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையணை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு
X

பைல் படம்

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (39). இவர் தலையணை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிவக்குமார் தலையணைகளை விற்பனை செய்ய கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர் காவிரி புதிய பாலத்தில் சென்றுகொ ண்டிருந்தபோது, அவரது டூ வீலர் நிலைத்தடுமாறி ரோட்ரோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்ததில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...