/* */

கந்தாம்பாளையம்: டூ வீலர்- லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

கந்தாம்பாளையம் அருகே, டூ வீலர் மீது லாரி மோதி விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கந்தாம்பாளையம்:  டூ வீலர்- லாரி மோதிய விபத்தில்  மின்வாரிய ஊழியர் பலி
X

பரமத்தி வேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே உள்ள கோதூர் உத்திக்காபாளையத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் விக்னேஷ் (25). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கவுசல்யா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

சம்பவத்தன்று விக்னேஷ் வேலையை முடித்து விட்டு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பி சென்றார். உலகபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றபோது, எதிர் திசையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி டூ வீலரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டம் சித்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?