/* */

பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு விழா

பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு விழா
X

பரமத்தி ஒருங்கிணைந்த கோர்ட் திறப்பு விழாவில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் குத்துவிளக்கேற்றி வைத்தார். அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் மற்றும் நீதிபதிகள்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி பை-பாஸ் ரோட்டில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா கலந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கோர்ட்டை திறந்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து பரமத்தி கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட கலெக்டர் ஸ்யோசிங், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், பரமத்தி சார்பு நீதிபதி பிரபாகரன், மாஜிஸ்திரேட் பழனிக்குமார், உரிமையியல் கோர்ட் நீதிபதி பிரியா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். திரளான வக்கீல்கள் மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...