/* */

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு: போலீஸ் விசாரணை

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு: போலீஸ் விசாரணை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், மன்னாந் தோட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல். டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அருக்காணி (60). இவர் சம்பவத்தன்று அதிகாலை பால்காரரிடம் பால் ஊற்றி விட்டு கேனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர், வீட்டின் முன்பு மின்இணைப்பை துண்டித்தார்.

பின்னர் இருட்டில் நின்று கொண்டு இருந்த அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் எடையுள்ள தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்ம ந பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 1 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்