Begin typing your search above and press return to search.
பரமத்திவேலூர்: டூ வீலர் மோதியதால் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூர் அருகே, டூ வீலர் மோதியதால் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தைச் சேர்ந்தவர் குமரன் (65). கூலித்தொழிலாளி. இவர் மரவாபாளையத்தில் இருந்து பரமத்திவேலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் 3 ரோடு அருகே சென்றபோது, பின்னால் வந்த டூ வீலர் குமரன் மீது மோதியது.
இதனால் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிகக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ப.வேலூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.