/* */

அரசு டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மோகனூர் அருகே அரசு பஸ் மோதியதால், டூ வீலரில் சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரசு டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (45), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு மோகனூரில் இருந்து தனது டூ வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் ரோட்டில், அருவங்காட்டு புதூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக அவரது டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பதிரியில் அனுமதிக்கப்பட்ட, தண்டபாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மோகனூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 July 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...