Begin typing your search above and press return to search.
அரசு டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
மோகனூர் அருகே அரசு பஸ் மோதியதால், டூ வீலரில் சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (45), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு மோகனூரில் இருந்து தனது டூ வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் ரோட்டில், அருவங்காட்டு புதூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக அவரது டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பதிரியில் அனுமதிக்கப்பட்ட, தண்டபாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மோகனூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.