/* */

குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டரிடம் மனு

நாமக்கல் அருகே சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டரிடம்  மனு
X

சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வசதி கேட்டு மனு கொடுப்பதற்காக, நாமக்கல் கலெக்டர் அலவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்தனர்.

நாமக்கல் அருகே சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்துள்ள மனுவில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை பஞ்சாயத்தில் சின்னதளிகை கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பஞ்சாயத்து மூலம் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் கிணறுகள் ஏற்கனவே பழுதடைந்துவிட்டன.

ஜேடர்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரும் கடந்த 2 மாதங்களாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் தனியார் விவசாய தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் போதி அளவு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 2020-2021-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் தளிகை பஞ்சாயத்திற்கு, ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் குடிநீர் தேவைக்கு ஒதுக்கப்பட்டும், அந்த பணி முடிந்து இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடத்து சின்னதளிகை கிராமத்திற்க சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

Updated On: 10 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்