/* */

பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய மளிகைக்கடை உரிமையாளர் கைது

நாமக்கல் அருகே, பெண்ணைக்கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய மளிகைக்கடை உரிமையாளர் கைது
X

நாமக்கல் ரோஜா நகரில், கடந்த 22-ந் தேதி தனியார் நிலத்தில் உள்ள கிணற்றில், அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. அவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கிடைத்த அளித்த தகவலின் அடிப்படையில், என்.கொசவம்பட்டியில் வசித்த கணவரை இழந்த லலிதா (40) என்பவர், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், அதே பகுதியை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சுரேந்திரன் (25) என்பவர், கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி, லலிதாவை காரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேந்திரன் கொசவம்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருவதும், அதற்கு லலிதா பணம் கொடுத்து உதவி செய்ததும் தெரியவந்தது. இருவரும் நெருங்கி பழகி, அடிக்கடி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. லலிதா கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். சுரேந்திரன் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. சம்பவத்தன்று லலிதாவை காரில் அழைத்துச் சென்ற சுரேந்திரன், அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், லலிதா அணிந்திருந்த தங்க செயின் மற்றும் தோடு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு லலிதாவின் உடலை பிளாஸ்டிக் சாக்குப்பையில் கட்டி, நாமக்கல், ரோஜா நகரில் ரோடு ஓரம் இருந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, லலிதாவுக்கு சொந்தமான மூன்றரை பவுன் தங்கச்செயின் மற்றும் தோடு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். லலிதாவை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 30 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’