Begin typing your search above and press return to search.
கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம்
Dead News Today -நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த, படைவீடு டவுன் பஞ்சாயத்து உதவியாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
Dead News Today - நாமக்கல் மாவட்டம், படைவீடு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தன் (56). இன்று திங்கள்கிழமை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் கலந்துகொள்வதற்காக அவர் பணிக்கு வந்தார். கலெக்டர் அலுவலகம் வந்த அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2