மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த தமாகா
namakkal news, namakkal news today-நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் கோஸ்டல் இளங்கோ, மேற்கு மாவட்ட தலைவர் திருச்செங்கோடு செல்வகுமார், மாவட்ட துணை தலைவர்கள் பெருமாள், சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரன், நாமக்கல் நகர தலைவர் சக்தி வெங்கடேஷ், திருச்செங்கோடு நகர தலைவர் மூர்த்தி, மகளிரணி பாவாயி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 3 ஆண்டுகள், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்
இந்நிலையில் தற்போது தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், அவற்றின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். தமிழக அரசு கடந்த காலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இப்பொழுது வணிகம், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்தி மறைமுகமாக மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கிஇருக்கிறது. உடனடியாக தமிழக அரசு சென்ற ஆண்டு உயர்த்திய வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வு, இப்பொழுது வணிகம், சிறு,குறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை இரண்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.