/* */

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி: நாமக்கல் கலெக்டர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு வேலைவாய்ப்புத்துறை சார்பில் இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைன்  மூலம் இலவச பயிற்சி: நாமக்கல் கலெக்டர் தகவல்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு வேலைவாய்ப்புத்துறை சார்பில் இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் - 2 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. போட்டியாளர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள வெப்சைட் மூலம் ஆன்லைனில், பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடுகேரியர்சர்வீஸ்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கற்றல், எலக்ட்ரானிக் பாட மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணைக் கொடுத்து லாக்இன் செய்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து, அதில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்யலாம். மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்