காணாமல் போன 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போய் போலீசாரால் மீட்கப்பட்ட, 104 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மாயமான செல்போன்களை கண்டுபிடித்துக் கொடுக்க சம்மந்தப்பட்டவர்கள் போலீஸ் எஸ்பி சரோஜ் தாகூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் 104 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதையடுத்து கண்டறியப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.
எஸ்.பி சரோஜ் தாக்கூர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வேதப்பிறவி, எஸ்.ஐ. புவனேஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.