Begin typing your search above and press return to search.
நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 5,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற, 21 மெகா கொரரோனா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது.
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.