/* */

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை அடிக்கல்

நாமக்கல் புதிய நகரில் 19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்க நாளை 20ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை அடிக்கல்
X

பைல் படம்

நாமக்கல் புதிய நகரில் 19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்கநாளை 20ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.

நாமக்கல் டவுன் பஞ்சாயத்தாக இருந்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக மாறி, தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைநகராக ஆன பிறகும், பஸ் நிலையம் விரிவாக்கப்படவும் இல்லை. புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவும் இல்லை. இதனால் நாமக்கல் நகரில் அடிக்கடி போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கார்ஷமீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சலையில் நாமக்கல் நகரம் அமைந்திருந்தும், போக்குவரத்து நெரிசல் காரணமாக தொலூர பஸ்கள் டவுனுக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றன.

தற்போதைய நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், நாமக்கல் - சேலம் ரோட்டில் முதலைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம், நகாட்சி நிர்வாகத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு, புதிய பஸ் நிலையம் அமைவிடத்தை, சில மாதங்களுக்கு முன் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலையை பஸ் நிலையத்துடன் இணைப்பதற்கான, அனுகு சாலைக்காக, ரிங் ரோடு அமைப்பதற்காகன இடம் கையகப்டுத்துவதில் காலதமாம் காரணமான அமைந்தது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கெள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரிங் ரோட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையெட்டி முதலைப்பட்டி அருகில், நவீன வசதிகளுடன் சுமார் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய பஸ் நிலைய அடிக்கல்நாட்டு விழா நாளை 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிப் பேசுகிறார். விழவிற்கான ஏற்பாடுகளை நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Updated On: 20 Oct 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்