தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: அமைச்சர் மதிவேந்தன்
தமிழக அரசின் இலவச மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் மதுராசெந்தில் முன்னிலை வகித்தார்.
தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை கிடைக்க, தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், 7 நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கே முன்னுதாரணமான திட்டம் தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டமாகும்.
இதனை அனைத்து பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை பெறுவற்காக விண்ணப்பித்த 5 பயனாளிகளுக்கு, உடனடியாக மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில், 159 பயனாளிகளுக்கு ரூ.3.84 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
டிஆர்டிஏ திட்ட இயக்குனர் சிவக்குமார், திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.