/* */

மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் கலெக்டர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்:  நாமக்கல் கலெக்டர்
X

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான, அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர் மூலம் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாகபிரிக்கப்பட்டு தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் மூலம் பராமரிக்கப்படும் இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு இண்டர்நெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது நேரடி களஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணையுடன் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும். தகுந்த காரணங்கள் இன்றி எந்தொரு மனுவினையும் நிராகரிக்கக் கூடாது. மனுக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் தீர்வு கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தர வேண்டுமென்று கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்